 |
கலைஞர் காப்பீட்டு திட்டம்
கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கி ஒரு மாதத்தில் 1100 பேருக்கு உயிர் காக்கும் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.ஏழை, எளிய விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தனியார் மருத்துவமனையில் உயிர்காக்கும் உயர் சிகிச்சை அளிக்கும். கலைஞர் காப்பீட்டு திட்டம் கடந்த 23-7-2009 அன்று தொடங்கப்பட்டது.
இருதய ஆபரேஷன், சிறுநீரகம் மாற்று ஆபரேஷன், நுரையீரல், எலும்பு முறிவு, பக்கவாதம், பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர்சிகிச்சை பெறலாம்.
இதற்கான மருத்துவ செலவை அரசு வழங்குகிறது. இந்த மருத்துவ காப்பீட்டு பணியை ஸ்டார் இன்சூரன்சு நிறுவனம் செயல்படுத்துகிறது. ஒரு கோடி பேருக்கு இந்த இலவச காப்பீட்டு திட்டம் அரசால் அளிக்கப்படுகிறது.
இத்திட்டம் பொதுமக்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கிராமப்புற மக்களுக்கு இத்திட்டம் சென்றடைய வேண்டும் என்பதற்காக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. கலைஞர் காப்பீட்டு திட்டம் தொடங்கி ஒரு மாதம் நிறைவு பெற்ற நிலையில் 1100 பேர் இதன் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
கலைஞர் காப்பீட்டு திட்ட அதிகாரி விஜயகுமார் கூறியதாவது:-
ஏழை-எளிய மக்கள் சிகிச்சை பெற முடியாமல் உயிர் இழக்கக்கூடிய நிலை இருந்ததை முதல்-அமைச்சர் கருணாநிதி மாற்றி உயிர் காக்கும் உயர்ந்த சிகிச்சையை இலவசமாக அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1100 பேர் இலவசமாக பல்வேறு அறுவை சிகிச்சைகளை செய்து உடல் நலத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இருதயம், சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு நோய்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்து பயன் அடைந்துள்ளனர். இதற்கான ரூ. 5.3 கோடி மருத்துவ செலவை அரசு வழங்கியுள்ளது.
இத்திட்டத்தில் பயன் அடைய கூடியவர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதுவரை 3? லட்சம் பேர் புகைப்படம் எடுக்கப்பட்டு உள்ளனர். அவர்களது கையெழுத்துடன் கூடிய புகைப்படம் அடங்கிய அடையாள அட்டை இன்னும் 10 நாளில் வழங்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இதற் காக அமைக்கப்பட்ட 750 குழுக்கள் நகரம் முதல் கிராமந்தோறும் சென்று நோயினால் பாதிக்கப்பட்ட வர்களை அடையாளம் கண்டு புகைப்படம் எடுத்து வருகிறது.
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
|
|
CALL RAILWAY POLICE:
Next time you travel in a train and require assistance from the Police, dial 9962 500 500. This new facility was launched in the city on Monday 25th Dec 2007.
On receipt of the call from the traveling public, the personnel at the Railway police control room would ascertain the details and in turn, convey the message to the escort policemen traveling in the particular train, who would reach to the seat/berth of the passenger's compartment and take action. In case the escort personnel in absent in the moving train, the control room would alert the next approaching railway police station so that proper assistance can be provided. |
|
UNDATE WATER SAMPLES:
Good for health? Ascar, Aquafast, Saravana Store, Aqua City, Aqua Mukil, Surya, Avinash, Paular, Srienergia, NSK Aqua Top, Chill, Cool Breeze, Chiclerry, Magic, Dolphin Magic, Eagle.VGR, Herbal Water, Nila, Wave, Sri Balaji Ripple, Megam, Greet, Real Fresh, Super, Tech, Yoga, Spice Aqua, VGR, Prime Life, Ice Touch, Lingam. 14 Apr 2008. The Hindu |