 |
| |
| |
| |
| |
| |
|
|
|
|
JOKES |
|
"புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது"
"புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?"
"என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!" |
|
"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?"
"சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு" |
|
என்ன இந்த நாயின் விலை ஆயிரம் ரூபாயா? அநியாயமாக இருக்கே.
சார்! இது மிகவும் நன்றியுள்ள நாய். இருந்த இடத்தை எப்போதும் மறக்காது. அதனால்தான் இந்த விலை.
எதனால் இந்த நாயை மிகவும் நன்றியுள்ளது என்று சொல்கிறாய்?
இதுவரை இந்த நாயைப் பத்துப் பேருக்கு விற்று இருக்கிறேன். இருந்த இடத்தை மறக்காம இங்கே திரும்பி வந்துடுச்சி, அதனால்தான். |
|
புதிதாக லாரி வாங்கிய ஒருவர் டிரைவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு வண்டியை ஓட்டச் சொன்னார். வண்டி ஓடத் தொடங்கியதும், கடமுட என்று சத்தம் கேட்டது.
உடனே அவர் என்ன சத்தம் கேட்குது? என்று டிரைவரைக் கேட்டார்.
நான் கியரை மாற்றினேன். அதனால்தான் அந்த சத்தம் என்றான் டிரைவர்.
நான் பக்கத்தில் இருக்கும் போதே நீ கியரை மாற்றினால் நான் இல்லாத போது நீ என்ன செய்ய மாட்டாய்? என் வண்டியை விட்டு இறங்கு, என்று கோபத்துடன் கத்தினார், அவர். |
| |
முதலாளி : ஏற்கனவே, மகளுக்குக் காது குத்தல், மகனுக்கு மொட்டை, மாமியார் கருமாதி என்று விடுமுறை எடுத்து இருக்கே, இப்ப என்ன காரணத்திற்காக விடுமுறை கேட்கறே?
வேலைக்காரன் : நான் திருமணம் செய்து கொள்ளப் போறேன். அதற்காக விடுமுறை வேண்டும். |
| |
"பாலிடெக்னிக் பிரின்ஸிபாலை போலீஸ் பிடிச்சிக்கிட்டு போறாங்களே ஏன்?"
"டிப்ளமா இன் திருட்டு வி.சி.டி. டெக்னாலஜினு புதுசா கோர்ஸ் ஆரம்பிச்சாராம்.." |
| |
"என்ன தலைவர் எல்லோரையும் இந்த அடி அடிக்கிறாரு?"
"அவரோட பலத்தை நிரூபிக்கச் சொன்னதைத் தப்பா புரிஞ்சுக்கிட்டாரு.." |
| |
மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்..?"
"என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு!" |
"நீங்கதானே தமிழ்செல்வன்..?"
"ஆமாங்க..?"
"உங்க பேர்லே கணக்கு இருக்கா..?"
"கணக்கு- இல்லைங்க தமிழ்-தான் இருக்கு?" |
"ஏன்யா வித்தவுட்லே போறே..... இதிலே ஏ.சி. கேக்குதா...?"
"எதிலேயும் நான் கொஞ்சம் கவுரவமா நடந்துக்குவேன் சார்!" |
போலீஸ்: இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?
திருடன்: அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன். |
"உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட் பிடிக்கறானே சார்.."
"சீ.. சீ.. அவன் பிடிக்கறதுக்கு ரொம்ப நாள் முன்னாடியே நான் பிடிக்க ஆரம்பிச்சுட்டேன்.." |
சங்கீத வித்துவான் 1: எனக்கு மேடை ஏறி கச்சேரி செய்கிறதைவிட வானெலியில் கச்சேரி செய்கிறதுதான் ரொம்ப பிடிக்கும்.
சங்கீத வித்துவான் 2: ஏன் அப்படி சொல்லுறீங்க..?
சங்கீத வித்துவான் 1: அப்பதானே மேலே கல்லு வந்து விழாது. |
கணவன்: என் பொண்டாட்டி என்ன திட்டிட்டாடா...
நண்பன்: ஏன்?
கணவன்: கல்யாணமாகி இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் சமைக்கக்கூட வரலை, போய் உங்க அப்பாக்கிட்ட கத்துக்கிட்டு வாங்கனு சொல்லிட்டா... |
"முனியாண்டி! நீ அடிச்ச கொள்ளை நிரூபணமாயிடுச்சு அதனால் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்!"
"எஜமான்! கண்ணைக் கட்டி வாயைக் கட்டி அடிச்ச பணமுங்க கொஞ்சம் கருணை காட்டுங்க! |
"தலைவருக்கு எத்தனை மனைவி?"
"சட்டப்படி ஒண்ணு, 'செட்டப்'படி ஏழு!" |
மாலா: எங்க தாத்தாவுக்கு தினமும் கேழ்வரகுக்கூழ், கம்பங்கூழ் இருந்தா போதும் வேற எதுவும் தேவையில்லை.
ஹரி: ஓகோ! அப்ப வெறும் 'கூழ்'ட்ரிங்ஸ் தான்னு சொல்லு.... |
"அந்தத் திருடனைப் பிடிக்க முடியாதுன்னு எப்படிச் சொல்றீங்க?”
"அவனோட செல் நெம்பர்ல ட்ரை பண்ணினேன்.not reachableனு வந்தது சார்…!” |
செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது. |
ஜோதிடர் : கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க..................
கணவன் : இதுக்கு பரிகாரமே இல்லையா, ஜோதிடரே |
ஓவராக சரக்கடித்துவிட்டு போதையில், வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் விழுந்தவன் சொன்னான்..
"ஆல் இஸ் வெல்" |
கணவன்: ஆபிரேஷன்ல நான் இறந்து போயிட்டா...
நீ அந்த டாக்டரையே கல்யாணம் பண்ணிக்கோ
மனைவி: ஏங்க இப்படியெல்லாம் பேசுறீங்க?
கணவன்: பின்னே... டாக்டரை நான் எப்படிப் பழிவாங்குறது |
நம்ம அப்பா முட்டாளாம்மா?"
"எதுக்குடா இப்படி கேகிறே?"
"எங்க வாத்தியார் என்னை முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே" |
போருக்குப் போகும்போது கிரீடம், வாள் உறை,
மார்புக்கவசம் எதுவும் வேணாங்கறீங்களே... ஏன் மன்னா?"
"நாப்பது அம்பது கிலோவை சுமந்துக்கிட்டு
எப்படிய்யா வேகமா ஓடி வர முடியும்?" |
யோவ், யாருய்யா ஆபரேஷன் தியேட்டர் வாசல்லே சூஸைட் பாயிண்ட்-னு எழுதி வெச்சது ? |
மனைவி:- நேற்று நான் பார்த்து முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.
சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.
கணவன்:- இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன் |
மனைவி:"ஏன் இப்படி பேயடிச்சமாதிரி இருக்கிறீங்க?"
கணவன்:"கொஞ்ச நேரத்துக்கு முன் நீதானே அடித்தாய்" |
அவர்:எதுக்கு பெண் போலீஸ் எல்லாம் திடீர் போராட்டம் நடத்துறாங்க?
இவர்:அவங்க யூனிபார்ம்ல ஜன்னல் வைக்க அனுமதி கோரியாம்! |
மேடம்... ஒரு அஞ்சு நிமிஷம் வெளில வெய்ட் பண்ணுங்க...
எதுக்கு டாக்டர் ?
தெர்மா மீட்டர் வெச்சு டெம்பரேசர் பார்க்கணும்... நீங்க பக்கத்துல இருக்கறதால இவரு வாயைத் திறக்க மாட்டேங்கறார் |
Venice Raj :
தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சு
ஏன் ?
நர்ஸிங் ஹோம் வெச்சுத்தரச் சொல்லி பிடிவாதம் பண்றாரு. |
Venice Raj:
இனிமே மனிதப் பிறவியே எடுக்காம இருக்க என்ன செய்யணும் சாமி...?
ஏன் கேட்கிறாய் மகனே ?
என்மனைவிஏழேழுஜென்மத்துக்கும்எனக்கேமனைவியாவரணும்னுவேண்டிக்கிறாளே |
|
|
|